Home One Line P1 ‘அமெரிக்கா பயங்கரவாத நாடு’ என்ற கருத்துக்கு சவாவி கண்டிக்கப்பட வேண்டும்

‘அமெரிக்கா பயங்கரவாத நாடு’ என்ற கருத்துக்கு சவாவி கண்டிக்கப்பட வேண்டும்

593
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அமெரிக்கா ஒரு பயங்கரவாத நாடு என்று கூறியதற்கு பாசிர் புத்தே நாடாளுமன்ற உறுப்பினர் நிக் முகமட் சவாவி சல்லேவை வெளியுறவு அமைச்சகம் கண்டிக்க வேண்டுமென்று ஜசெகவின் தியோ நீ சிங் வலியுறுத்தியுள்ளார்.

நிக் சவாவியின் கருத்தை நாடாளுமன்றத்தில் மற்றொரு “உணர்ச்சி சீற்றம்” என்று விவரித்த ஜசெகவின் அனைத்துலக செயலாளருமான அவர், இது அமெரிக்காவுடனும் உள்ளூர் பொருளாதாரத்துடனும் மலேசியாவின் உறவுக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்தார்.

அமைச்சகம் நிக் சவாவியின் வெளியுறவுக் கொள்கைக் கருத்துக்களை நிராகரிக்க வேண்டும். அமெரிக்கா நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக பங்காளி,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

#TamilSchoolmychoice

“அமெரிக்காவை ஒரு பயங்கரவாத நாடு என்று முத்திரை குத்துவதன் மூலம், நாம் இராஜதந்திர உறவுகளை துண்டிக்க வேண்டும் என்று பாசிர் புத்தே பரிந்துரைக்கிறாரா? இது நமது பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மலேசியர்களுக்கும் அமெரிக்காவில் வாழும் அல்லது குடும்பங்களைக் கொண்டிருப்பதற்கும் என்ன அர்த்தம் என்பதை அவர் புரிந்துகொள்கிறாரா?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவரது தூண்டுதலான வார்த்தைகள் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்,” என்று நியோ கூறினார்.

நேற்று மக்களவையில், நிக் சவாவி அமெரிக்காவை பயங்கரவாதிகள் என்று அழைத்தார். மேலும் அந்நாட்டோடு கடுமையாக இருக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.