Home One Line P1 அகமட் மஸ்லான் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்

அகமட் மஸ்லான் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்

634
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான், மாமன்னரால் அங்கீகரிக்கப்பட்ட அவசரநிலைகளில் இருந்து மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

பத்து குலாம் அம்னோ தொகுதிச் செயலாளர் முசாபர் குலாம் முஸ்தாக்கிமிடமிருந்து இந்த கண்டிப்பு எழுந்துள்ளது. அகமட் மஸ்லான் அவசரகால பிரச்சனையை விவாதிக்க முயற்சிப்பதாக அவர் விவரித்தார்.

அகமட் மஸ்லானின் சர்ச்சைக்குரிய அறிக்கை அம்னோ மீதான மக்கள் வெறுப்பை அதிகரித்தது என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“முன்னதாக, அம்னோ அவசரநிலை தொடர்பாக மாமன்னரின் கட்டளையை மதித்தது. எனவே இந்த அவசரநிலை குறித்து மேலும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ களத்தில் இறங்குவது நல்லது. அம்னோ பொதுச் செயலாளரின் சர்ச்சைக்குரிய அறிக்கைகள், மக்களை அம்னோவை இன்னும் வெறுக்க வைக்கின்றன. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, கொவிட்- 19 மற்றும் இந்த வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவுவதில் நாம் மும்முரமாக இருக்க வேண்டும். அவர் தனது சர்ச்சைக்குரிய அறிக்கையால் நிலைமையை மோசமாக்கியுள்ளார், ” என்று குலாம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அகமட் மஸ்லான் நிலைமையை மோசமாக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், தேவைப்படும் மக்களுக்கு கொவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு உதவுவது மிகவும் பொருத்தமானது.

இந்நேரத்தில், 15- வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள அம்னோவை வலுப்படுத்தும் உத்திகளைப் பற்றி அகமட் மஸ்லான் சிந்திக்க வேண்டும். அகமட் மஸ்லான் பல அறிக்கைகளால் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். அது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.