Home One Line P1 அம்னோவில் பிரிவினையைத் தவிர்க்கவும்- இஸ்மாயில் சப்ரி

அம்னோவில் பிரிவினையைத் தவிர்க்கவும்- இஸ்மாயில் சப்ரி

412
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோவை தொடர்ந்து வலுப்படுத்தவும், அதில் பிரிவினையைத் தவிர்க்கவும் கட்சி உறுப்பினர்களுக்கு அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அழைப்பு விடுத்தார்.

மலாய்க்காரர்களின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை இஸ்மாயில் வலியுறுத்தினார்.

“சவாலான அரசியல் உலகத்தை எதிர்கொள்ள மலாய் பூமிபுத்ராக்கள் ஒன்றுபடும் முக்கியத்துவத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், 15- வது பொதுத் தேர்தல் விரைவில் நடக்க இருப்பதை மறுக்க முடியாது.

#TamilSchoolmychoice

“அம்னோ தொடர்ந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும். பிளவு காரணமாக எந்தவிதமான பிளவுகளும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அம்னோவின் உள்கட்சி விவகாரங்கள் அதிகரித்து வரும் இந்நிலையில், இஸ்மாயிலின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய முன்னணி மற்றும் அம்னோ அரசாங்கத்தில் இருந்த வரை, இந்த நாடு நன்கு ஆளப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக இஸ்மாயில் கூறினார். மேலும், இனங்களுக்கிடையில் பரஸ்பர மரியாதை செலுத்தும் அணுகுமுறை எப்போதும் பராமரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“எனவே, தேசிய முன்னணியில் ஓர் அங்கமாக இருக்கும் அம்னோ நாட்டின் முதுகெலும்பாக மாறினால் மற்ற இனங்கள் கவலைப்பட வேண்டியதில்லை,” என்று அவர் விளக்கினார்.

கடந்த பொதுத் தேர்தலில், அடைந்த தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள அம்னோவை அவர் நினைவுபடுத்தினார்.