Home One Line P1 அம்னோ: 2018-இல் கட்சித் தேர்தல் நடத்தாதது தோல்விக்கு வித்திட்டது!

அம்னோ: 2018-இல் கட்சித் தேர்தல் நடத்தாதது தோல்விக்கு வித்திட்டது!

551
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலுக்கு முன்பு கட்சித் தேர்தல் நடத்தப்படுவது அம்னோவை பலவீனப்படுத்தும் என்ற நஜிப் ரசாக்கின் கூற்றை கைரி ஜமாலுடின் நிராகரித்தார்.

14- வது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்க 2018-இல் கட்சித் தேர்தலைத் தள்ளிவைக்க அம்னோ எடுத்த முடிவு தேசிய முன்னணியின் வெற்றி வாய்ப்புக்கு உதவவில்லை என்பதை கைரி நினைவுபடுத்தினார்.

“இந்த ஆலோசனையை நஜிப் செய்தார். ஆகவே, நான் பதிலளிக்க விரும்புகிறேன். 14-வது பொதுத் தேர்தல் காரணமாக அம்னோவின் 2018- இல் கட்சி தேர்தலை அவர் ஒத்திவைத்தார். ஆயினும், நாம் தோற்றோம்,” என்று கைரி கூறினார்.

#TamilSchoolmychoice

15-வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் தலைமையைத் தேர்ந்தெடுப்பதற்காக கட்சித் தேர்தலை நடத்துவது, கட்சியை பலவீனப்படுத்தும் மற்றும் பிற அரசியல் கட்சிகள் அம்னோ உறுப்பினர்களை ஏற்கக்கூடும் என்று நஜிப் நேற்று கூறியிருந்தார்.

அதற்கு முதல் நாள், அம்னோ தனது கட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று கைரி கூறியிருந்தார். கட்சியின் உள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், தேர்தலுக்குப் பிறகு அதை நடத்துவதற்குப் பதிலாக, அதனை விரைவுபடுத்துவதற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

நடந்து முடிந்த அம்னோ பொதுப் பேரவையில், பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிப்பதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தற்போதைய தேசிய கூட்டணி அமைச்சரவையில் உள்ள அனைத்து அம்னோ அமைச்சர்களும் எந்நேரத்திலும் பதவி விலகுவார்கள் என்று கூறியிருந்தார்.