Home நாடு கொவிட்-19: ஒருநாளில் 84 மரணங்கள் – 11 பேர் மரணமடைந்த பின்னர் கொண்டு வரப்பட்டனர்

கொவிட்-19: ஒருநாளில் 84 மரணங்கள் – 11 பேர் மரணமடைந்த பின்னர் கொண்டு வரப்பட்டனர்

797
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர்: கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலத்திலும் நாட்டில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையும், மரண எண்ணிகையும் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 84 பேர் கொவிட் தொற்றால் மரணத்தைத் தழுவினர்.இவர்களில் ஆண்கள் 48 பேர், பெண்கள் 36 பேர். மரணமடைந்தவர்களில் 53 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். 26 பேர் 50-க்கும் 60-க்கும் இடைப்பட்ட வயதைக் கொண்டவர்கள்.

மரணமடைந்தவர்களில் 11 பேர் மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டவர்களாவர்.

#TamilSchoolmychoice

இந்த மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 4,721 ஆக உயர்ந்தது.

சிலாங்கூர் 32 மரணங்களோடு மிக அதிகமான மரணங்களைப் பதிவு செய்திருக்கிறது.

இதற்கிடையில் நேற்று வியாழக்கிழமை ஜூன் 24 வரையிலான ஒரு நாளில் மட்டும் புதிய 5,841 கொவிட் – 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில்  இதுவரையில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 716,847 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறினார்.

மொத்தம் பதிவான 5,841 தொற்று சம்பவங்களில் 5,833 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 8 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 5,411 -ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 650,964-ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 61,162 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 869 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 438 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

மாநிலங்களைப் பொறுத்தவரை சிலாங்கூரில் 2,072 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் 781 தொற்றுகளையும் சரவாக் 581 தொற்றுகளையும் கண்டிருக்கிறது.

கோலாலம்பூர் 552 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.