Home நாடு கொவிட்-19: மரண எண்ணிக்கை 102 – தீவிர சிகிச்சைப் பிரிவில் 964 பேர்

கொவிட்-19: மரண எண்ணிக்கை 102 – தீவிர சிகிச்சைப் பிரிவில் 964 பேர்

2084
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை ஜூலை 12 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 102 மரணங்கள் பதிவாயின. அதே வேளையில் மேலும் 964 பேர் நாடு முழுவதிலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை  ஜூலை 11 வரையிலான ஒரு நாள் மரண எண்ணிக்கை 91 மரணங்கள் எனப் பதிவாகியிருக்கும் நிலையில் இன்று மரண எண்ணிக்கை 102 ஆக அதிகரித்திருக்கிறது.

மேலும் 964 பேர் நாடு முழுவதிலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக, கொவிட் மரண எண்ணிக்கை ஏறத்தாழ இதே அளவில் தொடர்ந்து கொண்டிருக்கும் அபாயம் நிலவுவதாக கருதப்படுகிறது.

இன்றைய ஒருநாள் மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்து 6,260 ஆக உயர்ந்தது.

மரணமடைந்தவர்களில் ஆண்கள் 52 பேர், பெண்கள் 50 பேர்.  மரணமடைந்தவர்களில் 14 பேர் மரணத்துக்குப் பின்னரே மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

மரணமடைந்தவர்களில் 61 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாவர். 40 பேர் 50-க்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர்களாவர்.

ஒருவர் 30 வயதுக்கும் குறைவான வயதுடையவர் ஆவார்.

ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 8,574

ஒருநாள் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 9 ஆயிரத்துக்கும் கூடுதலாக கடந்த சில நாட்களாக இருந்து வந்த நிலையில் இன்று தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து 8,574 ஆகப் பதிவாகியது.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 844,870 ஆக உயர்ந்திருக்கிறது.

மொத்தம் பதிவான 8,574 தொற்று சம்பவங்களில் 8,534 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 40 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 5,041 – ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 747,338 -ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 91,272 ஆக உயர்ந்திருக்கிறது.

இவர்களில் 964 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 452 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக 8 ஆயிரம், 9 ஆயிரம் என அதிகரித்து வந்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை இன்று திங்கட்கிழமை (ஜூலை 12) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் ஆறுதலளிக்கும் விதத்தில் 8,574 ஆகக் குறைந்தன.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 844,870 ஆக உயர்ந்திருக்கிறது.

மாநிலங்களைப் பொறுத்தவரையில் முதல் இடத்தில் வழக்கம்போல் சிலாங்கூர் இருக்கிறது. 4,308 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்திருக்கிறது.

மொத்த தொற்றுகளில் ஏறத்தாழ பாதி எண்ணிக்கையிலான தொற்றுகள் சிலாங்கூரில் பதிவாகியிருக்கின்றன.

தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வந்த கோலாலம்பூர் இன்று கணிசமான அளவில் தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்ததால் 609 தொற்றுகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.