Home நாடு ப.இராமு அறக்கட்டளை ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபுக் கவிதைத் தொகுப்பு நூல்

ப.இராமு அறக்கட்டளை ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபுக் கவிதைத் தொகுப்பு நூல்

791
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மறைந்த மலேசியக் கவிஞர் ப.இராமுவின் நினைவாக டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் ப.இராமு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபு கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 12-ஆம் தேதி செந்தூல் செட்டியார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமை தாங்கினார்.

கவியரங்கமும், இலக்கிய உரைகளுக்கும் மத்தியில் இறையருட்கவிஞர் ஐயா சீனி நைனா முகம்மது அவர்களுக்கும், வளர்ந்து வரும் கவிஞர் விண்ணமுதன் அவர்களுக்கும் விருதும் வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஓர் இலக்கிய விழாவாக மலர்ந்த மரபு கவிதைத் தொகுப்பு நூலான “மலையகத் தொகை” நூல் வெளியீட்டு விழாவை அடுத்து, புதுக்கவிதைத் தொகுப்பு நூலும் இடம்பெறும் என்றும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சரவணன் தெரிவித்துள்ளார்.

இந்த நூல் வெளியீட்டு விழா தொடர்பான படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: