Home Photo News திருச்சியில் சரவணனுக்கு சிறப்பான வரவேற்பு

திருச்சியில் சரவணனுக்கு சிறப்பான வரவேற்பு

557
0
SHARE
Ad

திருச்சி : தமிழ்நாட்டுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு திருச்சி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு நல்கப்பட்டது.

ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தமிழ்நாட்டிற்கான வருகையை மேற்கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று புதன்கிழமை (ஜூன் 22) வந்தடைந்தார்.

இடைவிடாத மலேசிய அரசியல் பணிகளுக்கிடையில், தமிழ் நாட்டில் இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சரவணன் வருகை தந்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்த பயணத்தின் போது தமிழ்நாட்டுப் பிரமுகர்கள், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பட்டவர்களையும் சரவணன் சந்திக்கவுள்ளார்.

இராமநாதபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மலேசிய வணிகர்கள் ஏற்பாடு செய்திருக்கும் பிரத்தியேக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றிலும் அமைச்சர் கலந்து கொள்வார்.

திருச்சி வந்தடைந்ததும் பத்திரிகையாளர்களிடம் பேசிய சரவணன், தனது இலக்கியப் பயணம் மலேசியாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் இருக்கும் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் எனத் தெரிவித்தார். கோவிட்-19 காலகட்டத்தில் பாதிப்பை எதிர்நோக்கிய 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு மலேசிய அரசாங்கம் தொடர்ந்து நிதி உதவி வழங்கிய காரணத்தால் வேலையில்லாத் திண்டாட்டம் கணிசமாகக் குறைந்ததாகவும் சரவணன் தெரிவித்தார்.

கோவிட் காலகட்டத்தில் 5.3 விழுக்காடாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம் தற்போது 4 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது என்றும் சரவணன் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டிலிருந்து தொழிலாளர்களைத் தருவிப்பதற்கு 2 துறைகளில் மட்டுமே மலேசிய அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது என்றாலும் மற்ற துறைகளுக்கும் தமிழ் நாட்டுத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்கு இந்தியத் தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சரவணன் குறிப்பிட்டார்.