அந்த வழக்கில் முன்னாள் இராமசாமி 1,520,000-00 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
தான் பணக்கார அரசியல்வாதி இல்லை என்றும் பொதுமக்கள் உதவியால்தான் அந்த இழப்பீட்டுத் தொகையை தன்னால் செலுத்த முடியும் என இராமசாமி அறிவித்திருந்தார்.
பாலஸ்தீன மக்களுக்கு வழங்குவேன் – சாகிர் நாயக் அறிவிப்பு
இதற்கிடையில் தனது முகநூல் பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து கருத்துரைத்த சாகிர் நாயக், இராமசாமி மூலம் கிடைக்கப்போகும் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீன மக்களின் நலன்களுக்காக வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
இராமசாமிக்கு ஆதரவாகத் திரட்டப்படும் நிதிக்கு நிதி வழங்கி வருபவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள் – இந்துக்கள் ஆவர். இவர்கள் வழங்கும் நிதி – யாரோ ஒரு தனிநபருக்கு செல்லாமல் – பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு சென்று சேரப் போகிறது என்பதும் ஓர் ஆறுதலான செய்திதான்.