Home இந்தியா ஜெயலலிதா வழக்கு: நீதிமன்றத்தில் அன்பழகனின் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்!

ஜெயலலிதா வழக்கு: நீதிமன்றத்தில் அன்பழகனின் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்!

434
0
SHARE
Ad

Jayalalithaaகர்நாடகா, ஏப்ரல் 28 – உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பேரில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் எழுத்துப் பூர்வமான வாதத்தை திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன் 41 நாள்களாக நடந்தது.

பிறகு, இந்த வழக்கில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞர் பவானிசிங்கின் நியமனம் செல்லாதது என்று கோரி திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பவானி சிங்கின் நியமனம் செல்லாதது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், மேல்முறையீட்டு மனு விசாரணையில் எழுத்துப் பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய அன்பழகனுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.

அதன்பேரில், அன்பழகன் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்களை அவரது தரப்பு வழக்குரைஞர்கள் பி.குமரேசன், ஏ.சரவணன், ஆர்.தாமரைச்செல்வன், எம்.நடேசன், பாலாஜி சிங் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று திங்கள்கிழமை தாக்கல் செய்தனர்.

ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டு சொத்துக் குவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த விவரங்கள், வங்கிப் பரிவர்த்தனைகள், முறைகேடு குற்றச்சாட்டுக்கான விவரங்கள்,

கட்டிடச் செலவினங்கள் போன்றவற்றுக்கான விவரங்களை தனது வாதத்தில் அன்பழகன் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா தரப்பில் முன்வைத்த வாதங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலான எதிர்வாதங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.