Home நாடு எம்.துரைராஜ்-ஆதி.இராஜகுமாரன் நினைவேந்தல் நிகழ்ச்சி

எம்.துரைராஜ்-ஆதி.இராஜகுமாரன் நினைவேந்தல் நிகழ்ச்சி

1354
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அண்மையில் மறைந்த மலேசியத் தமிழ் எழுத்துலகம் மற்றும் பத்திரிக்கை உலகத்தின் மூத்த பத்திரிக்கையாளர்கள் எம்.துரைராஜ் மற்றும் ஆதி.இராஜகுமாரன் இருவரின் பணிகளையும், பங்களிப்பையும் நினைவு கூரும் வண்ணம் நினேவேந்தல் நிகழ்ச்சி ஒன்றை மலேசிய பாரதி தமிழ் மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, செந்துல் கறி ஹவுஸ் என்ற இடத்தில் நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில், எம்.துரைராஜ், ஆதி.இராஜகுமாரன் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள் கலந்து கொண்டு அவர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

அனைவரும் கலந்து சிறப்பிக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.