Home நாடு லத்தீஃபா பிரதமரை சந்தித்தார், ஜூன் 21-ஆம் தேதி பதவி ஏற்கிறார்!

லத்தீஃபா பிரதமரை சந்தித்தார், ஜூன் 21-ஆம் தேதி பதவி ஏற்கிறார்!

562
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வழக்கறிஞரும் லோயார்ஸ் அப் லிபர்டி அமைப்பின் நிருவாக இயக்குனருமான லத்தீஃபா கோயா கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அரசாங்கத் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தில் பெரும் எதிர்ப்பலை எழுந்தது.

அதனைக் கடந்து, நாளை வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக லத்தீஃபா பதவி ஏற்க உள்ளதாக நம்பப்படுகிறது. இது சம்பந்தமாக இன்று வியாழக்கிழமை பிரதமர் மகாதீர் முகமட்டை அவரது அலுவலகத்தில் லத்தீஃபா சந்தித்துள்ளார்.

முன்னாள் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவரான முகமட் சுக்ரி அப்துல் தனது சேவையை முன்கூட்டியே முடித்துக் கொள்வதாகக் கூறியதன் பேரில் இந்த நியமனம் செயல்படுத்தப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருகிற 2020-ஆம் மே 17-ஆம் தேதி சுக்ரியின் சேவைக் காலம் முடிவடைய இருந்தது.

#TamilSchoolmychoice

இந்த நியமனமானது அரசு நிறுவனங்களை சீர்திருத்தும் செயல்முறைக்கு ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என தாம் நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. லத்தீஃபா இரண்டு வருட தவணைக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் இருப்பார்.