அவர் மறைந்தாலும் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள், அவரிடம் இலக்கணப் பாடம் படித்தவர்கள், அவரின் கவிதை ஆற்றலில் கொஞ்சம் அவரிடமிருந்து கற்றுக் கொண்டவர்கள் என பலரும் இன்னும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். அவரின் நினைவாக சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் (உப்சி – UPSI) நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி நடத்தப்பட்டு அதற்கான பரிசளிப்பு விழா கடந்த சனிக்கிழமை ஜூலை 27-ஆம் தேதி டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது.
அமரர் சீனி நைனா முகமது அவர்களின் இலக்கியப் படைப்புகள், உலகத் தமிழர்களிடையே நிரந்தரமாக நிலைத்து நிற்க வேண்டும் என்ற நன்னோக்கில், சீனி ஐயாவுடன் நெருங்கிப் பழகிய மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் அன்னாரின் எழுத்தோவியங்களை ‘நல்லாற்கினியர் நற்பதிவுகள்’ என்ற தலைப்பில் இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். செல்லியல் ஊடகமும், முத்து நெடுமாறனின் முரசு சிஸ்டம் நிறுவனமும் இணைந்து இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
சீனி நைனா முகமதுவின் படைப்புகளை கீழ்க்காணும் இணைப்பில் வாசகர்கள் படித்து மகிழலாம்:
https://kural.anjal.net