Home நாடு கஸ்தூரி இராமலிங்கம் மாநில அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றார்

கஸ்தூரி இராமலிங்கம் மாநில அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றார்

2513
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – ஜோகூர் மாநில அளவில் சிறந்த முறையில் பணியாற்றிய பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா கடந்த செவ்வாய்க்கிழமை அக்டோபர் 16-ஆம் தேதி மூவார் நகரில் நடைபெற்றது.

மாசாய் தமிழ்ப் பள்ளி சார்பாக பள்ளியின் தலைமையாசிரியை பெரியாச்சி பெருமாள் விருது பெறுகிறார்…

இந்த நிகழ்ச்சியில் மாநில அளவில் சிறந்த புறப் பாடத்திட்டத்திற்காகவும் விளையாட்டுத் துறைக்காகவும் வழங்கப்படும் Anugerah Emas Kokurikulum JPNJ 2018 என்ற விருது மொத்தம் 10 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. அதில் 3 விருதுகள் தமிழ்ப்பள்ளிகளுக்கு கிடைத்தன. அந்த விருதுகளைப் விருதுகளைப் பெற்ற பள்ளிகள் பின்வருமாறு:-

1. மாசாய் தமிழ்ப் பள்ளி (SJKT MASAI)
2. ரீனி தோட்டத் தமிழ்ப் பள்ளி (SJKT LADANG RINI)
3. தாமான் துன் அமீனா தமிழ்ப் பள்ளி (SJKT TAMAN TUN  AMINAH)

#TamilSchoolmychoice

மேலும் Anugerah Kokurikulum Cemerlang Kategori Sekolah Kluster என்ற பிரிவுக்கான விருதை சுங்கை மூவார் தமிழ்ப் பள்ளி (SJKT SUNGAI MUAR) பெற்றது.

கஸ்தூரி இராமலிங்கத்திற்கு சிறந்த ஆசிரியர் விருது

இதே நிகழ்ச்சியில் சிறந்த ஆசிரியர்களுக்கான Guru Cemerlang Kokurikulum Peringkat Negeri Johor என்ற விருது மாநில அளவில் மூன்று ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் மாசாய் தமிழ்ப் பள்ளியின் ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கமும் ஒருவராவார். புறப்பாடத் திட்டம், விளையாட்டுத் துறை ஆகிய துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்கள் வரிசையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

விருது பெற்ற மாசாய் தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி பெரியாச்சி பெருமாள் அவர்களுடன் கஸ்தூரி இராமலிங்கம்
ரீனி தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு விருது வழங்கப்படுகிறது.
ஜோகூர் துன் அமீனா பள்ளிக்கு விருது வழங்கப்படுகிறது