Home நாடு ரேய்மண்ட் கொ, அமிர் விவகார சிறப்புக் குழுவிலிருந்து மொக்தார் முகமட் நூர் வெளியேற்றம்!

ரேய்மண்ட் கொ, அமிர் விவகார சிறப்புக் குழுவிலிருந்து மொக்தார் முகமட் நூர் வெளியேற்றம்!

567
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் ஆர்வலர் அமிர் சே மாட் காணாமல் போன விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழு தொடர்பில் பல்வேறு எதிர்ப்புகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அரசு சாரா நிறுவனங்கள் தெரிவித்து வந்த நிலையில், காவல் துறையின் முன்னாள் சட்டப் பிரிவுத் தலைவர் மொக்தார் முகமட் நூர் இந்த சிறப்புக் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக வேறொரு நபரை கூடிய விரையில் அமைச்சு அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அண்மையில் ஆர்வலர் அம்ரி சே மாட் மற்றும் ரேய்மண்ட் கொ இருவரின் நிலை குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சால் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு பணிக்குழுவை அவர்களின் (அம்ரி சே மாட் மற்றும் ரேய்மண்ட் கொகுடும்ப உறுப்பினர்கள் எதிர்த்திருந்தனர்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரத்தில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று அம்ரி சே மாட்டின் மனைவி நோர்ஹாயாதி முகமட் அரிபின் கூறியிருந்தார்.

காவல் துறையின் முன்னாள் சட்டப் பிரிவுத் தலைவர் மொக்தார் முகமட் நூர் இந்த சிறப்புக் குழுவில் நியமனம் செய்யப்பட்டதை அவர்கள் எதிர்த்துள்ளனர்மேலும்மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்)    விசாரணையில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் இதில் நியமிக்கப்பட வேண்டியதில்லை என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் உள்துறை அமைச்சர் மொகிதின் யாசினுக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி சிறப்புக் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.