SHARE
Ad

சென்னை – நேற்று ஞாயிற்றுக்கிழமை (3 ஆகஸ்ட்) இரவு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த முறை வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவரான ரேஷ்மா இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.

கடந்த வாரம் 5 பேர் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட சக பங்கேற்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.கவின், மதுமிதா, ரேஷ்மா, சாக்‌ஷி, அபிராமி ஆகியோரே அந்த ஐவராவர்.

இவர்களில் சனிக்கிழமை நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

நேற்று ஞாயிற்றுக்கிழமை பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன், முதலில் கவின் காப்பாற்றப்படுவதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியிலிருந்து ரேஷ்மா வெளியேற்றப்படுவதாக அறிவித்த கமல்ஹாசன் பின்னர் மேடையில் ரேஷ்மாவுடன் உரையாடி அவர் குறித்த குறும்படம் ஒன்றையும் போட்டுக் காண்பித்தார்.

ரேஷ்மாவை சக பங்கேற்பாளர்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்.