Home One Line P1 இன்று முதல் 2,897 பேர் கைது செய்யப்படுவர்!

இன்று முதல் 2,897 பேர் கைது செய்யப்படுவர்!

450
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 13 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு மீண்டும் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தாத 2,897 பேரைக் கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் தொடங்கும்.

இது குறித்து தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

முன்னதாக, கொவிட்19 தொடர்பாக இரண்டாவது பரிசோதனையை மேற்கொள்ளாத 2,900 மலேசியர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்று காவல் துறை தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குத் திரும்பிய இவர்கள் முதல் பரிசோதனைக்குப் பிறகு 13 நாட்கள் கழித்து மீண்டும் இரண்டாவது பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அவ்வாறு செய்யத் தவறிய 2,900 பேரும் கைது செய்யப்பட உள்ளனர்.

“அவர்கள் பரிசோதனையை மேற்கொள்ளாவிட்டால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதத்தை எதிர்கொள்வர் அல்லது இரண்டையும் எதிர்கொள்வர்.

“ஒரு வேளை கைது செய்யும் போது, கொவிட்19 தொற்றுக்கு நேர்மறையான அறுகுறிகளைக் கொண்டிருந்தால், சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் மீது வழக்கு தொடுப்போம். இந்த விவகாரத்தில் நான் தீவிரமாக உள்ளேன்” என்று அப்துல் ஹாமிட்  கூறியிருந்தார்.