Home One Line P1 சிலிம் இடைத்தேர்தல் : முன்கூட்டிய வாக்குப்பதிவு தொடங்கியது

சிலிம் இடைத்தேர்தல் : முன்கூட்டிய வாக்குப்பதிவு தொடங்கியது

565
0
SHARE
Ad

தஞ்சோங் மாலிம் : எதிர்வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கொவிட்-19 விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஏற்ப இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்றைய வாக்குப்பதிவில் 267 காவல்துறை அதிகாரிகள் தங்களின் வாக்குகளை பதிவு செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

வாக்களிப்பின் போது முகக் கவசம் அணிந்து இருப்பதோடு, தூர இடைவெளியையும் அவர்கள் கடைப் பிடிப்பர். மேலும் தங்களின் கரங்களை கிருமி நாசினிக் கொண்டு தூய்மைப் படுத்திக் கொள்வர்.

இவர்களைத் தவிர சிலிம் சட்டமன்றத்தில் பதிந்து கொண்டுள்ள மேலும் 32 காவல்துறை வாக்காளர்கள் அஞ்சல் வழி தங்களின் வாக்குகளை செலுத்துவர்.

இன்று மாலை 5.30 மணி அளவில் சிலிம் இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு நிறைவுபெறும்.

இன்றைய வாக்குப் பதிவை புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் கானி சாலே பார்வையிட்டார். எனினும் அவர் பத்திரிக்கையாளர்களிடம் சிலிம் தேர்தல் குறித்தோ மற்ற விவகாரங்கள் குறித்தோ தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

மும்முனைப் போட்டி

தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சிலிம் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில், தேசிய கூட்டணி மற்றும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்களுக்கு இடையிலான மூன்று முனை போட்டி ஏற்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட் 29 நடைபெறவிருக்கும் தேர்தலில், தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து அம்னோ தஞ்சோங் மாலிம் தொகுதித் தலைவர் முகமட்சைடி அசிஸ், 43, சுயேட்சை வேட்பாளர் வழக்கறிஞர் அமீர் குசைரி முகமட் தனுசி, 38, மற்றும் கல்வியாளர் டாக்டர் எஸ்.சந்தரசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

துன் டாக்டர் மகாதிர் முகமட்டின் புதிய கட்சி இன்னும் பதிவு செய்யப்படாததால், அந்தக் கட்சியின் வேட்பாளரான குசைரி சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

நான்கு தவணை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டத்தோ குசைரி அப்துல் தாலிப் (59) ஜூலை 15-ஆம் தேதி மாரடைப்பால்  காலமானதை அடுத்து சிலிம் சட்டமன்றம் காலியானது.