Home One Line P1 ‘ஆட்சி கவிழ்ப்புக்கு இது கெடா, மலாக்கா, ஜோகூர் அல்ல, சபா!’- ஷாபி அப்டால்

‘ஆட்சி கவிழ்ப்புக்கு இது கெடா, மலாக்கா, ஜோகூர் அல்ல, சபா!’- ஷாபி அப்டால்

618
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: தனது முந்தைய தலைமையின் கீழ் மாநில அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றதற்காக முன்னாள் சபா முதல்வர் மூசா அமானை வாரிசான் தலைவர் முகமட் ஷாபி அப்டால் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் சாடினார்.

“அவர் அதை (ஆட்சி கவிழ்ப்பை) கெடாவைப் போலவும், மலாக்காவைப் போலவும், ஜோகூரைப் போலவும் நினைத்து விட்டார். நம்பிக்கைக் கூட்டணி அங்கு விழக்கூடும்”

“இது கெடா அல்ல, இது மலாக்கா அல்ல, இது ஜோகூர் அல்ல. இது சபா!” என்று நேற்று லிடோ பிளாசாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

#TamilSchoolmychoice

முன்னாள் சபா முதல்வரிடம் அதிகாரத்தை ஒப்படைக்க விரும்பாததால், கடந்த மாதம் தாம் சபா மாநில சட்டமன்றத்தை கலைக்க முடிவு செய்ததாக ஷாபி கூறினார்.

மூசா மேற்கொண்ட சதி முயற்சிக்கு தீபகற்பத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஆதரவளித்ததாக அவர் கூறினார். சபா மக்களுக்கு வாக்களிக்கும் அதிகாரத்தை திருப்பித் தருவதாக தாம் சட்டமன்றத்தைக் கலைத்ததாக ஷாபி கூறினார்.

தமக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறி மூசா அமான் அரசியல் நகர்வை ஏற்படுத்த நினைத்த போது, தாம் இன்னும் சபா மாநிலத்தின் முதல்வர் என்றும், சபா மாநில சட்டமன்றத்தை கலைக்கக் கோரி தாம் மாநில ஆளுநரிடம் கோரியுள்ளதாகவும் அறிவித்து, மாநில சட்டமன்றத்தைக் கலைத்தார்.

மாநில ஆளுநர் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கு அனுமதி அளித்ததாக ஷாபி தெரிவித்திருந்தார். ஆயினும், மூசா அமான் தரப்பு ஷாபி அப்டாலும், ஆளுநரும் இணைந்து சதியை மேற்கொண்டுள்ளனர் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அவ்வழக்கும் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு இப்போது சபா மாநிலத்தில் தேர்தல் வருகிற செப்டம்பர் 26 நடைபெற உள்ளது.