பிபைசர் தடுப்பூசியை தாம் எடுக்கவில்லை என கைரி ஜமாலுடின் அறிவிப்பு

    899
    0
    SHARE
    Ad

    கோலாலம்பூர்: பிற தடுப்பூசிகளும் பயனுள்ளதாக இருப்பதை பொதுமக்களை நம்ப வைப்பதற்காக பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை எடுக்கப்போவதில்லை என்று தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று அறிவித்தார்.

    தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (என்.பி.ஆர்.ஏ) ஒப்புதல் அளித்த அடுத்த தடுப்பூசியை முதலில் எடுப்பவராக கைரி இருப்பார் என்று அவர் கூறினார்.

    பிரதமர், அமைச்சர்கள், சுகாதார இயக்குநர் மற்றும் முன்னணி பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பிபைசர் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைத்திருப்பதே இதற்குக் காரணம் என்று கைரி விளக்கினார்.

    #TamilSchoolmychoice

    “எனவே மக்கள் பிபைசருக்கு அதிக நம்பிக்கையுடன் உள்ளனர், ஏனென்றால் பிரதமர், தற்காப்பு அமைச்சரும் அதை எடுத்துள்ளார். பக்க விளைவுகள் எதுவும் இல்லை. இப்போது மக்கள், தலைவர்கள் அனைவரும் பிபைசர் தடுப்பூசியை எடுத்துக் கொண்டார்கள் என்றும், மீதமுள்ளவை அனைத்தும் சாதாரண மக்களுக்கு மட்டுமே என்று கருதுகிறார்கள்.

    “எனவே நான் நேற்று ஒரு முடிவை எடுத்தேன். அடுத்ததாக அங்கீகரிக்கப்படும் தடுப்பூசியை நான் எடுத்துக்கொள்வேன். அடுத்த தடுப்பூசி எதுவாக இருந்தாலும், அதை முதலில் எடுத்துக்கொள்வேன். அது சினோவாக் அல்லது அஸ்ட்ராஜெனெகா என்றால், எதுவாக இருந்தாலும் நான் எடுத்துக் கொள்வேன். நான் பிபைசர் தடுப்பூசியை எடுக்க மாட்டேன்,” என்று அவர் கூறினார்.