Home நாடு மாணவி பாலியல் அச்சுறுத்தல்: மலேசியாகினி, சீனா பிரஸை உள்துறை அமைச்சு அழைக்கும்

மாணவி பாலியல் அச்சுறுத்தல்: மலேசியாகினி, சீனா பிரஸை உள்துறை அமைச்சு அழைக்கும்

634
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாணவிக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்கள் குறித்து காவல் துறை துணைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி அளித்த கூற்று குறித்த விளக்கம் பெற உள்துறை அமைச்சகம் மலேசியாகினி மற்றும் சீனா பிரஸ்ஸை அழைக்கும்.

இவ்விரு அறிக்கைகளும் தவறானது என்று உள்துறை அமைச்சகம் கருதுகிறது.

“இதுதொடர்பாக, உள்துறை அமைச்சகம் மலேசியாகினி மற்றும் சீனா பிரஸ்ஸை உடனடியாக அழைத்து ஊடக அறிக்கைகள் பற்றிய தெளிவு மற்றும் கூடுதல் தகவல்களைப் பெற அழைப்பு விடுக்கிறது,” என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இருப்பினும் சந்திப்பின் தேதி கொடுக்கப்படவில்லை.

ஞாயிற்றுக்கிழமை, ஐன் ஹுஸ்னிசா சைபுல் நிஜாம், 17, தனது வகுப்பு மாணவரிடமிருந்து பாலியல் அச்சுறுத்தல்களைப் பெற்றதாகக் கூறினார்.

அதைத் தொடர்ந்து, மாணவரின் அச்சுறுத்தல்கள் குறித்து அவர் காவல் துறையில் புகார் அளித்தார்.

ஐன் மற்றும் அவரது தந்தை முன்பு ஆசிரியரின் கூற்று குறித்து புகார் அளித்திருந்தனர்.

நேற்று ஐன் வழக்கு குறித்து கேட்டபோது, ​​ஷா ஆலாமில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அக்ரில் பின்வருமாறு கூறினார்:

“மாணவி (ஐன்) இரண்டு புகார்களை பதிவு செய்திருந்தார். அதில் முதலாவதாக, ஆசிரியரின் அணுகுமுறை சரியானது அல்ல என்று அவர் உணர்ந்ததைப் பொறுத்து அவர் செய்தார்.

“நேற்று அவர் தனது வகுப்பு மாணவரிடமிருந்து இதே போன்ற அச்சுறுத்தல்களைப் பெற்றார். நகைச்சுவையாக இருக்கலாம், ஆனால், அவர் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது, ” என்று அவர் கூறினார்.