Home நாடு மறைக்காணி காட்சிகள் கணபதியுடன் சம்பந்தப்பட்டவை அல்ல!

மறைக்காணி காட்சிகள் கணபதியுடன் சம்பந்தப்பட்டவை அல்ல!

579
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இரண்டு நபர்கள் தாக்கப்படும் மறைக்காணி காட்சிகளை, ஏ.கணபதி சம்பவத்துடன் இணைப்பதை கோம்பாக் மாவட்ட காவல் துறைத் தலைவர் அரிபாய் தாராவே மறுத்துள்ளார்.

சம்பவத்தின் நம்பகத்தன்மை மற்றும் இருப்பிடம் குறித்து அவரது தரப்பு விசாரித்து வருவதாக அரிபாய் கூறினார்.

“அடித்து கொல்லப்பட்டவர் மறைந்த கணபதி, செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்தார் என்று கூறி ஒரு மறைக்காணி காணொலி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

#TamilSchoolmychoice

“இந்த விஷயத்தை நான் இதன்மூலம் கடுமையாக மறுக்கிறேன். சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தற்போது விசாரணையில் உள்ள கணபதி வழக்கில் இந்த காட்சிகளை பரப்ப வேண்டாம் என்றும் அதை இணைக்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

45 வினாடி காட்சிகளில் எட்டு ஆண்கள் சுற்றிலும் இருக்க அறையின் மூலையில் இருவரை ஒருவர் தாக்குகிறார். அவர் இரப்பர் குழாய் வைத்திருப்பது போல தோற்றமளிக்கிறது.

இது ஒரு சிறிய அறையில் நடப்பதாகத் தெரிகிறது. 2021 ஜனவரி 28 தேதியை அக்காணொலி காட்டுகிறது.

கணபதி, 40, பிப்ரவரி 24 அன்று அவரது சகோதரர் மீதான விசாரணைக்கு உதவ காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு மார்ச் 8 அன்று விடுவிக்கப்பட்டார். ஆயினும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கணபதி சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.