Home நாடு முன்னாள் காவல் துறை தலைவர்கள் அரசியல் தலையீடு குறித்து வாய் திறக்க வேண்டும்

முன்னாள் காவல் துறை தலைவர்கள் அரசியல் தலையீடு குறித்து வாய் திறக்க வேண்டும்

621
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மூத்த எதிர்க்கட்சி அரசியல்வாதி லிம் கிட் சியாங், ஆறு முன்னாள் தேசிய காவல் துறைத் தலைவர்களை மாநில காவல் துறைத் தலைவராக நியமிப்பதில் அரசியல் தலையீடு உள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

அப்துல் ரகிம் முகமட் நூர் (1994- 1999), நோரியன் மாய் (1999- 2003), மூசா ஹசான் (2006- 2010), இஸ்மாயில் உமர் (2010- 2013), காலிட் அபுபக்கர் (2013- 2017) மற்றும் முகமட் புசி ஹருண் (2017-2019) ஆகியோருக்கு எதிராக இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

காவல் துறை தலைவராக மிக நீண்ட காலம் பணியாற்றிய ஹனிப் உமர், மூன்று அமைச்சர்களுடன் தனது 20 ஆண்டுகால சேவையின் போது அவ்வாறு நடக்கவில்லை என்று குரல் கொடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த வெள்ளிக்கிழமை, தேசிய காவல் துறைத் தலைவராக தனது கடைசி பத்திரிகையாளர் சந்திப்பில், உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடினின் அரசியல் தலையீடு குற்றச்சாட்டுகளை ஹாமிட் பாடோர் கண்டித்தார்.