Home நாடு தேசிய கூட்டணியில் தொடர்வதற்காக அம்னோ அதற்கான விலையைக் கொடுக்க வேண்டிவரும்

தேசிய கூட்டணியில் தொடர்வதற்காக அம்னோ அதற்கான விலையைக் கொடுக்க வேண்டிவரும்

429
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்திலிருந்து விரைவில் வெளியேறாவிட்டால் செய்த பாவங்களின் விலையை அம்னோ செலுத்த வேண்டியிருக்கும் என்று மூத்த அம்னோ தலைவர் துங்கு ரசாலி ஹம்சா தனது கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய கூட்டணி அரசாங்கம் செய்த மிகப்பெரிய பாவம் அவசரநிலையை அறிவித்ததாகும், அதில் அம்னோ உடன்படவில்லை என்று அவர் கூறினார். மேலும் இது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அண்டை நாடுகளை நோக்கி செல்வதாகவும் அவர் கூறினார்.

“வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, உள்ளூர் முதலீட்டாளர்களும் இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளுக்கு திரும்புகின்றனர். இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான வேலைகள் இழக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

“தேசிய கூட்டணியில் இருப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால், நாங்கள் அவர்களின் கூட்டணியில் உறுப்பினர்களாக இல்லாவிட்டாலும், தேசிய கூட்டணி செய்த பாவங்களையும் தவறுகளையும் நாம் சுமக்க வேண்டியிருக்கும்.

“மற்றவர்களின் பாவங்களின் சுமைகளை அம்னோ ஏன் தாங்க வேண்டும்?” என்று அவர் மலேசியா இன்சைட் செய்தித்தலத்திடம் கூறினார்.