Home நாடு செங்குட்டுவன் வீரன் – சிலாங்கூர் கல்வி இலாகா தமிழ் மொழிப் பிரிவு துணை இயக்குநரானார்

செங்குட்டுவன் வீரன் – சிலாங்கூர் கல்வி இலாகா தமிழ் மொழிப் பிரிவு துணை இயக்குநரானார்

797
0
SHARE
Ad

ஷா ஆலாம் : ஆசிரியர் தொழிலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் செங்குட்டுவன் வீரன், பொது வாழ்க்கையிலும், சமூக இயக்கங்களிலும் கடந்த காலங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்திருக்கிறார்.

செங்குட்டுவன் வீரன் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் – சிலாங்கூர் கல்வி இலாகா தமிழ் மொழிப் பிரிவு துணை இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அவருக்கான பதவி நியமனக் கடிதத்தை கல்வி இலாகாவின் திட்டமிடல், நிருவாகப் பிரிவின் துணை இயக்குநர் ஹாஜி அப்துல் அசிஸ் பின் அப்துல் ஜாலில் அண்மையில் வழங்கினார்.

#TamilSchoolmychoice

பதவி நியமனக் கடிதம் வழங்கப்பட்ட வேளையில் சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின், கல்விப் பிரிவு துணை இயக்குநர் டத்தின் நோர் பாரிடா பிந்தி ஏ.பர்ன் உடனிருந்தார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal