Home நாடு கிளந்தான் : 45 தொகுதிகள் – பெரும்பான்மை பெற்று பாஸ் ஆட்சி அமைக்கிறது – புதிய...

கிளந்தான் : 45 தொகுதிகள் – பெரும்பான்மை பெற்று பாஸ் ஆட்சி அமைக்கிறது – புதிய மந்திரி பெசார் யார்?

412
0
SHARE
Ad

கோத்தாபாரு : கிளந்தான் மாநிலத்தில் 45 சட்டமன்றத் தொகுதிகளில் 23 தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பதன் மூலம் அங்கு பாஸ் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சாலே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மொத்தமுள்ள 45 தொகுதிகளில் இதுவரையில் பெரிக்காத்தான்-பாஸ் கூட்டணி 39 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. ஒற்றுமை அரசாங்கக் கூட்டணி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

#TamilSchoolmychoice

கிளந்தான் மாநிலத்தில் நடப்பு மந்திரி பெசார் டத்தோ அகமட் யாக்கோப், துணை மந்திரி பெசார் மாற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமட் யாக்கோப் மாற்றப்படவில்லை – மாறாக அவரே மீண்டும் மந்திரி பெசாராகத் தொடர விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. கிளந்தான் மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் யார் என்ற ஆரூடங்கள் எழத் தொடங்கியுள்ளன.