Home இந்தியா வரும் 25-ம் தேதி 7 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுகிறது இந்தியா

வரும் 25-ம் தேதி 7 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுகிறது இந்தியா

3225
0
SHARE
Ad

seyarkai-kolசென்னை, பிப். 16-ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 25-ம் தேதி 7 செயற்கை கோள்களை ஏவ இந்தியா திட்டமிட்டுள்ளது.

ஏவப்படும் இந்த செயற்கை கோள்களில் 2 செயற்கை கோள்கள் கனடா நாட்டிற்கும் 2 செயற்கை கோள்கள் ஆஸ்திரியா நாட்டிற்கும் 1 செயற்கை கோள் இங்கிலாந்து நாட்டிற்கும் 1 செயற்கை கோள் டென்மார்க் நாட்டிற்கும் சொந்தமானவை. மற்றொன்று இந்தியா-பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘சரள்’ செயற்கை கோள் ஆகும்.

சுமார் 700 கிலோ எடையுள்ள இந்த 7 செயற்கை கோள்கைகளையும் சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி.-சி-20 என்ற விண்வெளிக் கலம் (ராக்கெட்) வரும் 25-ம் தேதி மாலை 6 மணிக்கு விண்ணில் பாய உள்ளது.

#TamilSchoolmychoice

இதற்காக வரும் 22-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை 59 மணிநேர  ‘கவுண்ட் டவுன்’ எனப்படும் நேரக் கணிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூரிய வட்டப்பாதையில் பூமியில் இருந்து சுமார் 785 கி.மீட்டர் உயரத்தில் இந்த 7 செயற்கை கோள்களும் நிலை நிறுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.