Home நாடு 3-வது அம்னோ உதவித் தலைவர் : ஜோகூரின் காலிட் நோர்டின்

3-வது அம்னோ உதவித் தலைவர் : ஜோகூரின் காலிட் நோர்டின்

1004
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ கட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் தேசிய உதவித் தலைவர்களாக முன்னாள் அமைச்சர்கள் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் மாட்சிர் காலிட் ஆகிய இருவரும் தேர்வாகியுள்ளனர்.

மூன்றாவது உதவித் தலைவருக்கான தேர்வில் முன்னாள் இரண்டாவது நிதியமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி மற்றும் ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் காலிட் நோர்டின் ஆகிய இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது.

இஸ்மாயில் சப்ரி

இவர்களில் வாக்கு எண்ணிக்கையின்படி மூன்றாவது தேசிய உதவித் தலைவராக டான்ஸ்ரீ காலிட் நோர்டின் வெற்றி பெற்றுள்ளார். இந்த அறிவிப்பை அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் வெளியிட்டார்.

மாட்சிர் காலிட்
#TamilSchoolmychoice

இதற்கிடையில் அம்னோவின் தேசியத் தலைவராக அகமட் சாஹிட் ஹமிடி வெற்றி பெற்றார்.

துணைத் தலைவராக நெகிரி மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் முகமட் ஹசான் வெற்றி பெற்றுள்ளார்.