கட்சியின் அவைத் தலைவராகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தலைமையிலான குழுவினர் இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தனர். சங்கப் பதிவிலாகாவின் தலைமை இயக்குநர் மஸ்யாத்தி அபாங் இப்ராகிமிடம் இந்த விண்ணப்பம் வழங்கப்பட்டது.
“எங்களின் கட்சி கூடிய சீக்கிரம் பதிவுபெறும் என்றும் அதன் மூலம் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பில் நாங்களும் இடம் பெற முடியும் என்றும் நம்புகிறோம்” என முக்ரிஸ் மகாதீர் பின்னர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
”தாய் மண்ணிற்காகப் போராடும் மாவீரர்கள்” என்ற பொருளில் இந்தக் கட்சியின் பெயர் மலாய் மொழியில் சூட்டப்பட்டுள்ளது. மலாய் கட்சியாகவும் இந்தக் கட்சி செயல்படும்.
அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து மகாதீர் பெஜூவாங் என்ற கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். பெர்சாத்து தங்களிடமிருந்து “கடத்தப்பட்டு” தற்போது ஊழல்வாதிகளுடன் இணைந்து விட்டதாகவும் மகாதீர் சாடினார்.
ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் பெஜூவாங் களம் காண்கிறது. புதிய கட்சிக்கான பதிவு இன்னும் கிடைக்கவில்லையாதலால் தனது வேட்பாளரை சுயேச்சை வேட்பாளராக மகாதீர் அறிவித்திருக்கிறார்.