Home நாடு பாஸ் துணைத் தலைவர் – வீ கா சியோங் மாமன்னரைச் சந்தித்தனர்

பாஸ் துணைத் தலைவர் – வீ கா சியோங் மாமன்னரைச் சந்தித்தனர்

690
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மாட் இன்று வியாழக்கிழமை (ஜூன் 10)  நண்பகலில் மாமன்னரைச் சந்தித்தார்.பாஸ் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் உடல் நலக்குறைவு அடைந்துள்ளதால் அவருக்குப் பதிலாக துவான் இப்ராகிம் மாமன்னரைச் சந்தித்திருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து மசீச தலைவர் வீ கா சியோங்கும் மாமன்னரைச் சந்தித்ததாக ஊடகத் ககவல்கள் தெரிவித்தன.

இன்று பிற்பகல் 3.00 மணியளவில் முன்னாள் பிரதமரும் பெஜூவாங் கட்சித் தலைவருமான துன் மகாதீர் மாமன்னரைச் சந்திப்பார். அதைத் தொடர்ந்து சபா வாரிசான் கட்சியின் தலைவர் ஷாபி அப்டாலும் மாமன்னரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் சரவாக் மாநிலத்தை ஆளும் கூட்டணியான காபுங்கான் பார்ட்டி சரவாக் எனப்படும் ஜிபிஎஸ் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இயங்கலை வழி எதிர்வரும் ஜூன் 14-ஆம் தேதி மாமன்னரோடு சந்திப்பு நடத்துவர் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று புதன்கிழமை தொடங்கி வரிசையாக பல அரசியல் தலைவர்களை மாமன்னர் சந்தித்தார்.

முதல் தலைவராக நேற்று காலையில் காலையில் பிரதமர் மொகிதின் யாசினைச் சந்தித்த மாமன்னர், அதன் பிறகு அன்வார் இப்ராகிம், ஜசெகவின் லிம் குவான் எங், அமானா கட்சியின் முகமட் சாபு ஆகியோரையும் சந்தித்தார்.

தேசிய முன்னணி தலைவர்களை மாமன்னர் சந்திப்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

அவசர காலத்தை நீட்டிப்பதா?

15-வது பொதுத் தேர்தலை நடத்துவதா?

நடப்பு அரசாங்கத்தையே ஆட்சியில் நீடிக்க அனுமதிப்பதா?

அல்லது புதிய ஒற்றுமை அரசாங்கத்தை நிர்மாணிப்பதற்கான சாத்தியத்தை ஆராய்வதா?

என்ற நான்கு கேள்விகளின் அடிப்படையில் மாமன்னர் அரசியல் தலைவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து முக்கிய முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த முடிவுகள் எதிர்வரும் ஜூன் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் கொண்ட அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.