Home நாடு அபாண்டி அலி நீக்கப்பட்ட விவகாரம் – சமரசத்திற்கு அரசு தரப்பு இணங்கவில்லை!

அபாண்டி அலி நீக்கப்பட்ட விவகாரம் – சமரசத்திற்கு அரசு தரப்பு இணங்கவில்லை!

503
0
SHARE
Ad
அபாண்டி அலி

கோலாலம்பூர் : முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி, அப்போதைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டால் நீக்கப்பட்டது தொடர்பில் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.

அந்த வழக்கு தொடர்பில் இரு தரப்புகளும் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது நல்லது என நீதிமன்றம் இரு தரப்புகளுக்கும் அறிவுறுத்தி உள்ளது.

எனினும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் சமரசப் பேச்சுவார்த்தைக்குத் தாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தொடர்ந்து வழக்கைத் தற்காத்து நடத்தவே விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

எனினும் நீதிமன்ற அறிவுரைப்படி சமரசப் பேச்சுவார்த்தைகள் பின்னர் நிர்ணயிக்கப்படும் என அபாண்டி அலியின் வழக்கறிஞர் பால்ஜிட் சிங் சிடு கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கிற்கான நிர்வாகம் மீதான விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அபாண்டி அலியின் வழக்கு விவரம்

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் முகமட் அபாண்டி அலி, 2018-இல் நம்பிக்கைக் கூட்டணி நிர்வாகத்தால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி, சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறார்.

2018-இல் அப்போதைய பிரதமர் துன் மகாதீர் தன்னை பதவி நீக்கம் செய்தது சட்டத்திற்கு எதிரானது என்ற காரணத்தினால் அவர் இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறார்.

2015-இல் ஜூலை 27- ஆம் தேதி தொடங்கி 2018 ஜூலை 26 வரை மாமன்னரின் ஒப்புதலுடன் சட்டத்துறைத் தலைவராக அபாண்டி நியமிக்கப்பட்டார்.

2018-இல் ஏப்ரல் 6-ஆம் தேதியன்று, அப்போதைய அரசாங்கத் தலைமைச் செயலாளர் (டான்ஸ்ரீ அலி ஹம்சா), மாமன்னர் தனது நியமனத்தை 2018 ஜூலை 27 முதல் நீட்டிக்க ஒப்புக் கொண்டதாகவும், 2018 மே 7 தேதியிட்ட கடிதத்தின் மூலம் தனது சேவை நீட்டிப்பைப் பெற்றதாகவும் அபாண்டி அலி தனது வழக்கில் தெரிவித்திருக்கிறார்.