Home இந்தியா ஓட்டு போடுபவர்களுக்கு பெட்ரோல் விலையில் தள்ளுபடி!

ஓட்டு போடுபவர்களுக்கு பெட்ரோல் விலையில் தள்ளுபடி!

311
0
SHARE
Ad

Petrol-price-hikeடெல்லி, ஏப்ரல் 10 – நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு போடுபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 50 பைசா தள்ளுபடி வழங்கப்படும் என்று டெல்லி பெட்ரோல் வங்கிகள் அறிவித்துள்ளன.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அஜய் பன்சால், “டெல்லியில் ஏப்ரல் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கும்போது 67 பெட்ரோல் நிலையங்களில் தள்ளுபடி வழங்கப்படும்.

ஓட்டு போட்டதற்கான அடையாளமாக, விரலில் மை அடையாளத்தைக் காட்டினால், அந்த நபர் போடும் பெட்ரோலில், லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடி செய்யப்படும்.” என்று தெரிவித்தார்.