Home நாடு பிகேஆர் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றமில்லை – அன்வார் அறிவிப்பு

பிகேஆர் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றமில்லை – அன்வார் அறிவிப்பு

139
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: இன்று புதன்கிழமை மாலை புத்ராஜெயாவிலுள்ள பிரதமர் இல்லத்தில் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அந்த விருந்துபசரிப்பு சந்திப்பின்போது எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பிகேஆர் தேர்தல் முடிவடைந்ததும் அமைச்சரவை மாற்றங்கள் எதனையும் நான் செய்யப் போவதில்லை எனத் தெரிவித்த அன்வார் எனினும் பதவி விலகப் போகிறவர்களைத் தான் தடுக்கப் போவதில்லை எனவும் கூறினார்.

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி, அந்தப் போட்டியில் தான் தோல்வியடைந்தால் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன் என அறிவித்துள்ளார்.


#TamilSchoolmychoice

மேலும் படிக்க:
பிகேஆர்: 4 இந்திய உதவித் தலைவர் வேட்பாளர்கள்! யாராவது வெல்ல முடியுமா?


பிகேஆர் கட்சியின் இளைஞர், மகளிர் பிரிவு மாநாடுகளைத் தொடக்கி வைக்கப் போவதில்லை என்றும் ரபிசி கடிதம் வழி தெரிவித்திருப்பதும் சர்ச்சையாகியுள்ளது. தான் தனிப்பட்ட முறையில் எழுதிய அந்தக் கடிதம் ஏன் பகிரங்கப்படுத்தப்பட்டது என்றும் ரபிசி கேள்வி எழுப்பியிருந்தார்.

பிகேஆர் கட்சியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போட்டிகள் நெருங்கிய நண்பர்களுக்கிடையிலான போட்டி எனக் குறிப்பிட்ட அன்வார், கட்சி இயந்திரத்தை யார் வலுப்படுத்துவார்கள் என கட்சிப் பேராளர்கள் கருதுகிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்கலாம், எனவும் அவர் தெரிவித்தார்.